Monday, February 28, 2011

ஏன்.... மாறிக்கொள்ள கூடாது...!

உங்கள் ஏமாற்றங்களை மட்டுமே ...
புலம்பி தீர்க்கும் நீங்கள்..
எப்போதாவாது..
நீங்கள் ஏமாற்றியததை நினைத்து ....
வருந்தியது உண்டா..?

இல்லை என்று சொன்னால்...
அதுவே ..
நீங்கள் ஏமாற்ற தொடங்குவதின்....
அரிசுவடி...!

சொன்ன சொல்லை..
நிறைவேற்ற முடியாமல் போகும்போது.. .
நீங்கள் செய்யும் சமாதானங்களில் ...
எத்தனை ஏமாற்ற வார்த்தைகள்...
எண்ணி பாருங்கள்..!

உங்களுக்கு தேவை என்று வரும்போது..
அதை அடைய ..
நீங்கள் ஏமாற்றிய விஷயங்கள்..
பட்டியல் போட்டு பாருங்கள்...
உங்களுக்கே அவமானமாய் புரியும்...!

உங்கள் நேசிப்பவர்களின் மனம் கவர .
நீங்கள் நடத்திய நாடகங்களில் ...
ஏமாற்றம் தராத செயல் ஏதாவது தென்படுகிறதா...?
உங்கள் பாசம்
பல வேசம் மாறும் ...!

உங்கள் மேல் ...
நம்பிக்கையை மற்றவர்கள் தரவேண்டும் ..
என்ற ஒரே நோக்ககத்தில் ...
நீங்கள் ஏமாற்ற ...
துணை தந்த ..
நிஜமாக்கப்பட்ட பொய்களை ..
கணக்கெடுத்து பாருங்கள்...!
தவறான விடைகளே கிடைக்கும்...!

உங்களை நிலை நிறுத்த..
நியாயப்படுத்த...
நீங்கள் ஏமாற்றியவர்களின் ...
வரிசையை பாருங்கள்..!
பரிதாப முகம்களுடன்..
பாசம் நிறைந்த....
உங்கள் பந்தங்களுக்கு..
நீங்கள் தந்த துரோகம்
உங்களை மட்டுமே சுடும்..!

நீங்கள் செய்யும் ஏமாற்றம்...
உங்களுக்கு ...
நொடிப்பொழுதின்..
நிறைவான நிம்மதி தரலாம்...
ஆனால்....

வம்சங்களை தாண்டியும்.....
அவப்பெயர்..
உங்கள் சந்ததியையே .
அவமதிப்பில் ....
அழித்து விடும்...!

ஏமாற்ற தொடங்குமுன்னே...
ஏன்....
மாறிக்கொள்ள கூடாது...!

No comments:

Post a Comment