Saturday, February 19, 2011

நீங்கள் நீங்கள் தான்...!

நான் நானாக இருக்க வேண்டும்...!
சொல்லிப்பார்ப்பததில்  சுகமில்லை...!
வாழ்ந்து பாருங்கள்
வலியின்...வகைகள் புரியும்...!

அன்பானவன்...என நீங்களே உறுதி கொள்ளவேண்டாம்...!
பிரதி பலன் இல்லா அன்பா உங்களது..?
மனசாட்சி உதறல் எடுத்து மறுத்து விடும்..!

அழகு உங்களுக்கு மட்டுமே அதிகம் என கற்பனை வேண்டாம்..!
எது அழகு..?எப்படி அழகு..!
பதிலில்லா கேள்விகள் பல உங்களிடம்...!

உழைப்பில் உங்கள் இணையாக வெளிப்படுத்த யாராலும் முடியாது
என இறுமாப்பு வேண்டாம்..!
சுயத்தேவையின் கட்டாயங்கள்...
கலக்காத உழைப்பை வரிசைப்படுதுங்கள்...
ஏதுமே இருக்காது..!

தியாகமும்..விட்டு கொடுப்பதுமே...உங்களின் சொத்து
என பொய் கணக்கு காட்ட வேண்டாம்...!
வேண்டாததை...கிடைக்காததை...எல்லாம்  விட்டு கொடுப்பது என....
யாராலும் நியாயப்படுத்த முடியாது...!

தான தர்மத்தில்...நீங்கள் கொடை வள்ளல் என பட்டம் சூடி கொள்ளாதீர்கள்...!
தனக்கு மிஞ்சியதுதான் உங்கள் தானமா...?
ஆம் என்றால் அதுவே உங்கள் அவமானம்....!

எதுவுமே கட்டாயமில்லாத....
எதையுமே எதிர்பார்க்காத...
தற்பெருமை இல்லாத..
தலை கணம் கொள்ளாத..

உங்களில்..இருக்கும் உங்களை
தேடி பிறப்பெடுங்கள்..

இனி...

சொல்லி பார்க்கவோ ...
உணரவோ தேவை இல்லை...

நீங்கள் நீங்கள் தான்...!

No comments:

Post a Comment