Monday, February 7, 2011

வாழ்க்கையின் அஸ்திவாரங்கள்..!

கற்பனை..
கனவு....
இது இல்லாமல்
யார் வாழ்க்கையும் தொடராது...!

கற்பனையில்...
எதை வேண்டுமானாலும் 
எதிர்பார்க்கவும் கூடாது...!

கற்பனையில்....
கண்ட அனைத்தும்
நிஜ வாழ்க்கையில்..
நடக்கும் என்ற
எதிர்பார்ப்பும் கூடாது..!

நியாயமான...
அத்தனையும்..
உங்கள் கனவில்
வர வேண்டும்..!

அந்த கனவுகள் தான்
உங்கள் நிஜ வாழ்க்கையை
வழி நடத்தும்....!

கற்பனையும்..
கனவும்...
பொழுதுபோக்கென வீணாகமல்..
நம்மை வழிநடத்தும்
திசைக்காட்டியாக
மாறி விட வேண்டும்...!

கற்பனையும்..
கனவும் ..
உங்கள்
வாழ்க்கையின் அஸ்திவாரங்கள்..!

சரியாகவும்...
முறையாகவும்....
அதை அமைத்துகொள்வது...
உங்களை மட்டுமே சார்ந்தது..!

வெறும் கனவும்... ...
வீணான கற்பனையும்..
நம் வாழ்வின்
திசையையே மாற்றிவிடும்..!

நிஜத்தை மட்டுமே
கற்பனை செய்வோம்..!

நடப்பதை மட்டுமே
கனவாக்குவோம்...!

No comments:

Post a Comment