Friday, February 25, 2011

உண்மையாக இருக்க முயற்சி எடுங்கள்...!

எல்லோரிடமும் உண்மையாக இருக்க வேண்டும்...!
முடியாது என மறுத்தால்...
உங்களை நேசிப்பவர்களிடம்..மட்டும்
உண்மையாக இருக்க முயற்சி எடுங்கள்...!

உங்களின் நேசம்,பாசம்,அன்பு,
தனித்து விளங்க வேண்டும்...!
பங்கு போடப்பட்டால்..
பாவம் அவர்கள்..நொறுங்கி போவார்கள்...!

உங்களை நேசிப்பவர்களை..
எந்த சூழ்நிலையிலும்
யாரிடமும்..விட்டு தந்து விடாதீர்கள்..!
விட்டுதரப்படுகிறோம்...
என மனதளவில் உணர்ந்தாலே..
அவர்கள் மனதளவில் மரணித்து போவார்கள்...!

உங்கள் நேசிப்பவர்களின் எதிர்பார்ப்புகள்..
அவர்கள் மூலமே வெளிப்பட வேண்டும்
என காத்திருக்காதீர்கள்..!
உங்களை எதிர்பார்த்து..
காத்திருந்து..காத்திருந்து...
அவர்களின் உள்ளம் காயப்பட்டு போகும்..!

ஒருபோதும்..
அவர்கள் உணர்வுகளை
உதாசீனம் செய்யாதீர்கள்...!
அதுவே
நீங்கள் அவர்களுக்கு சொல்லாலும்..செயலாலாலும்...
செய்யும் துரோகம்...!

அவர்களின் தன்மானம் தகர்க்கப்பட்டது என
உங்களிடம் புலம்பினால்..
அவர்களையே குற்றம் சாற்ற வேண்டாம்...
விரக்தி அடைந்து போவார்கள்...!

மற்றவர்களுக்காக
உங்களை நேசிப்பவர்களை...
தவிர்த்து விடாதீர்கள்...!
தனிமை சிறையில்
மீதி ஆயுளை முடித்து கொள்வார்கள்....!


மற்றவர்கள் உண்மையாக இருக்க வேண்டும்
என நினைக்கும் நீங்கள்...
முதலில்
உண்மையை கடைபிடிக்க தொடங்குங்கள் ...!

இன்று முதல்...!

No comments:

Post a Comment