நம்மால் தான் தீர்மானிக்கபபடுகிறது...!
நம்மோடு பழகுபவர்களின் தன்மை
நம்மால் தான்
தீர்மானிக்கபபடுகிறது...!
இதை
...ஏற்றுகொள்பவர்கள்
சந்தோசமாய் படியுங்கள் தொடர்ந்து....!
மறுப்பவர்கள்...
பலமுறை ..படியுங்கள் ....
புரிந்து கொள்வீர்கள்...!
உதவி தேவை என்றால்....
எதிர்பார்ப்புடன் கேளுங்கள்...
நிர்பந்தம் கூடாது...!
ஆலோசனை அவசியப்பட்டால்....
அனுபவங்களை கேளுங்கள்....
அலட்சியம் கூடாது...!
பண,பொருள் தேவைக்கு....
நம்பிக்கையை உறுதியாக்கி கேளுங்கள்...
சமாதானம் ..கூடாது...!
அன்பை வெளிப்படுத்த....
ஆதரவாய் இருங்கள்.....
சந்தேகம் வேண்டாம்...!
செய்யும் தொழிலில்
விசுவாசம் வெளிப்பட வேண்டும்...
ஒப்பிடுதல் கூடாது...!
முடிவெடுக்கும் முன்
பலவாறு யோசியுங்கள்....
செயல்படுத்தும் போது...
மறு பரிசீலனை...ஆகாது...!
முன்னேறும் போது...
எதிரே கவனம் தேவை...
பின்னோக்கி பார்த்து...
பிசகிட கூடாது....!
உங்கள் உயர்வுக்கும்..
வளர்ச்சிக்கும்...
நீங்கள் போதும்....
மற்றவர்களை நம்பி
தோற்பது கூடாது...!
ஆக,
உங்கள் முன் உள்ளவர்களை...
உருமாற்றும் சக்தி உங்களிடமே..
இதில்
உறுதியாய் வாழுங்கள்...!
உலகம் பற்றிய கவலை
உங்களை மட்டும்
ஒன்றுமே செய்யாது...!
No comments:
Post a Comment