Thursday, February 24, 2011

சுயபலத்தின் அஸ்திவாரம்..!

நினைப்பதும்..நடப்பதும்..
வேறு வேறாக இருந்தால்..
இனி சங்கடபடுவதை ...
ஓரம் தள்ளி ..
சந்தோசப்பட்டு பாருங்கள்...!

நினைப்பதெல்லாம்..
நடந்து கொண்டே இருந்தால் ..
வாழ்க்கை ..
அர்த்தமில்லாமல் அஸ்தமித்து போகும்....!

ஏமாற்றத்தின் அறிமுகம்தான் ....
புதியவைகளின் வெளிப்பாடு ...!

நிராகரிப்பின் மறுபக்கம் தான் ..
நமக்குள் விஸ்வரூபமேடுக்கும் ...
சுயபலத்தின் அஸ்திவாரம்..!

மறுக்கபடும் உதவிகளின் மூலம் ...
நம் தனித்துவத்தின் மறு பிறப்பை...
மகத்துவமாக்குவோம்...!

உதாசீனபடுத்தப்படும் போதெல்லாம்..
உழைப்பை உணர்ந்து..
உறுதிப்படுத்துவோம்...!

கிடைக்காததற்கெல்லாம் ...
இனி ஏக்கம் வேண்டாம்..
வானஎல்லை தாண்டும் முயற்சியின்...
ஏற்றம் விதைப்போம்..!

ஒதுக்கப்படும்போதும்..
ஒடுக்கபபடும்போதும்..
ஓடி ஒளிவதை தவிர்த்து..
துணிவை ..
வாழ்க்கையின் ஒளியாக்குவோம்..!

நினைப்பது நடப்பதைவிட..
நடந்ததை சந்தோசமாய்..
நினைத்தே வாழ்வோம்...!

No comments:

Post a Comment