Thursday, February 3, 2011

நிம்மதியின் அஸ்திவாரங்கள்..!

சிலசமயம்...
மன்னிப்பே ...
தண்டனையாக மாறும்...!

பல சமயம்
மன்னிப்பே...
மறுப்பிறப்பை தரும்...!

தெரியாமல் செய்த தவறுக்கு ..
மன்னிப்பது
திருந்த தரும் வாய்ப்பு...!

திரும்ப திரும்ப செய்யும் தவறுக்கு..
தண்டனை தருவது... 
மட்டுமே மன்னிப்பு...!

தாயின் கர்ப்ப காலம்...
மறந்து....
முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பந்தத்திற்கு ..
தாய் தரும் மன்னிப்பு...
கண்ணீர் கலந்த வாழ்த்து...!

நேசம் மறந்து..
பாசம் மறந்து...
சகோதரத்துவத்தை....
சொத்து..சுகத்திற்காக ...
பங்கு போடுவது..
மன்னிக்க முடியாது...என்றாலும்...
விட்டு கொடுப்பதே
மாபெரும் மன்னிப்பு..!

மறுக்கபடும்... உதவி...!
மறக்கபடும்... ஊக்கம்..!
மறைக்கபடும்..  தியாகம்...!
துரத்தப்பபடும்..இரக்கம்..!
சுயநலம் தந்த... கொடூரம்..!
வருமானத்திற்க்காக இழக்கபடும் ....தன்மானம்..!
புகழ் வேண்டி புதைக்கபடும்... தோழமை...!
இல்லற சுகத்தை பங்கு போடும் ....ஆண்மை..!
தாய்மையை...மண்மூட...செய்யும்....  பெண்மை...!
புறம் பேச சொல்லும்.... பொறாமை..!
குற்றம் மறைக்கும் ..பொய்மை...!
ஓரம் கட்டபடும்...பிறர் பெருமை...!
ஓயாது புலம்ப படும்..தற்பெருமை...!

இதெல்லாம்..
மன்னிப்பே தர முடியாத
மாபாவங்கள்..!

தவிர்பது...
தடுப்பது..
நம் வருங்கால
நிம்மதியின் அஸ்திவாரங்கள்..!

மன்னிப்பு வேண்டுவது ..
மட்டும் அல்ல...

மன்னிப்பு மறுப்பதும்.....

உயிரற்ற வாழ்க்கைக்கு
வழி வகுக்கும்...!

No comments:

Post a Comment