Saturday, January 15, 2011

"பயம்....!"

"பயம்....!"

நமது இயலாமையின் வெளிப்பாடு....என
உங்களை நீங்களே
சமாதானம் செய்து பாருங்கள்....
பயத்தின் உண்மை
உங்களுக்கே தெரிந்துவிடும்...!

பயப்பட்டு கொண்டேருந்தோம் என்றால்...
எதுவுமே..
ஏன்...
எல்லாமே...விரக்தியாகும்...!

பயம் என்ன என்பதை விட..
ஏன்  என்பதை விட...
எப்படி என்பதை விட..
எதனால் என்பதை விட...
எப்போது என்பதை விட....
பயம் ஆரம்பித்த
அந்த முதல் நொடியை...
ஆராய்ந்து  பாருங்கள்....!
உங்கள் இயலாமை என்ன...
எது...எப்படி...எங்கே..
எதனால்.. என
எல்லாமே.. புலப்படும்..
அப்புறமென்ன
அதை சரி செய்துவிடுங்கள்....
பயம் எங்கே போய்
யந்து ஒளிந்துவிட்டது
என
நீங்கள் தேடினால் கூட தெரியாது....!

நம் தாய்
பிரசவம் கண்டு பயந்திருந்தால்...
நம் பிறப்பு ஏது..?

சத்தத்தை கேட்டு பயந்திருந்தால்
நம்மால் பேச்சை...
மொழியை...
கற்றுக்கொள்ள முடியுமா...?

முதல் நடை தடுமாறிய போது
பயந்திருந்தால்....
முடங்கிபோயிருப்போம்...!

இப்படி அடுக்கி கொண்டே போனால்...
உங்களுக்கு வாழ்க்கையின் பயத்தை
அறிமுக படுத்தி விடும்...!

பயத்தை அறிவோம்....
வெற்றி பலனை அனுபவிப்போம்....!

No comments:

Post a Comment