Wednesday, January 26, 2011

நீங்கள் திறமைசாலி...!

மனிதனாய் பிறந்த....
ஒவ்வருவரிடமும்....
நிறைய..
திறமைகள்..
மறைந்து..
ஒளிந்து..கிடக்கின்றன...!

தனது...
திறமைகளை தெரிந்து கொண்டு ...
சரியான சமயத்தில் ..
வெளிப்படுத்திய மனிதன் ...
மாபெரும் வெற்றியில் ...
பயணிக்கிறான்...!

தனது ...
திறமைகள் தெரிந்தும் ...
வெளிப்படுத்த தயங்கியவன்...
ஏக்கத்துடன்...
முடங்கி போகிறான்...!


தனது..
திறமைகள் புரிந்து..
வெளிப்படுத்த மற்றவர்களின் ...
ஆதரவை எதிர்பார்ப்பவன்...
ஆண்டாண்டு காலமானாலும்..
அடிமை வாழ்க்கையை ...
அனுபவித்தே ....
முடிந்து போகிறான்....!

உங்கள் திறமைகள்..
உங்கள்..
புதையல்...!

எது ...
உங்கள் திறமைகள்..
என  ...
மாபெரும் ஆராய்ச்சியில்....
காலம் வீணாக்கப்படுவதைவிட....
நடைமுறையில் ....
உங்களின் ...
அனைத்து செயல்களும் ....
உங்கள் ...
திறமைகளின் வெளிப்பாடு .....
என நம்புங்கள்...!

நல்லதொரு வாழ்க்கை...
நாளும் ...
உங்களோடு தொடரும்...!

எல்லோரும்....
திறமையயாய் ...
வாழ்கிறார்கள் ..
என ..
நம்பும் உங்கள் எண்ணம்...
எவ்வளவு தவறானது ....
என ...
அந்த எல்லோரிடமும் ...
மனம் விட்டு பேசிப்பாருங்கள்....!

கானல் நீர் வாழ்க்கை எது
என்பது
உங்களுக்கு புரியும்...!

தெளிவும் பிறக்கும்...!

திறமைகளை....
நீங்கள் தேடும் அந்த நேரங்களில்...
உங்கள் திறமைகள் ....
உங்களுக்குள் இருந்து....
வெளிப்பட ...
உங்களை தேடும்....!

நீங்கள் திறமைசாலி...!

மற்றவர்கள்...
இதை ....
ஏற்றுக்கொள்வதைவிட....
நீங்கள் ...
ஒத்துக்கொண்டு...
நடைமுறை படுத்துங்கள்....!

வளமான வாழ்க்கையின்
வெற்றிப்பயணம்
உங்கள் வசம்..!

No comments:

Post a Comment