Monday, January 24, 2011

நான் ...யார்...?என்ன...?

பதட்டம் நிறைந்த...செயல்பாடு....!

சட்டென்று 
உணர்ச்சிவசப்பட்டு
கண்கள் கலங்குவது....!

ஏதாவது குறைகளை...
தேடி கண்டுபிடித்து...
மட்டம் தட்டி சந்தோசப்படுவது...!

எனக்கு மட்டும் தான்
எல்லாம் தெரியும்.... 
என பலமுறை....
பல இடங்களில்....
சொல்லி சொல்லி...
பெருமை பட்டு கொள்வது.....!

மிக சிறிய வேலையை
அரைகுறையாய் முடித்து இருந்தாலும்....
பலர் பாராட்டினார்கள்...
என பொய் பிரகடனம்..செய்வது....!

குறிப்பாக....

பார்த்த...
பழகிய...
அத்தனை பேர்களையும்....
முன்னால் பாராட்டி...
பின்னால் பழி பல சொல்வது.....!

முக்கியமாக....

இதுவரை
வாசித்த அத்தனையும்
தனக்கு பொருந்தாது..
தேவையுமில்லை...
என தவிர்த்து.....
ஆனால்...
தனிமையில்....
தவிப்பதும்...
தடுமாறுவதும்....!

இதெல்லாம்
உங்களுக்கும்.......
உங்களொடும்....
நடந்திருந்தால்...
உணர்த்தியிருந்தால்......

நீங்கள்....
திருந்தி..
திருத்திக்கொள்ள.....
இந்த நொடியிலிருந்து...
முடிவெடுத்து....
செயல்பட்டு பாருங்கள்...!

ஏனென்றால்....
இதுவரை  வாசித்தது....எல்லாம்..
மனிதனாய் பிறந்த....
எல்லோருக்கும்...
எப்படியாவது...
வாழ்வில் வந்து போகும்...
சராசரியான...சம்பவம்...!

உணர்ந்து....
தவிர்க்க...
தயங்கியவன்...
தலை குனிந்தே வீழ்கிறான்...!

புரிந்து...
தடுத்து...
முன்னேறியவன்...
தலைவன்..என
தரணியை..ஆள்கிறான்...!

No comments:

Post a Comment