Sunday, January 23, 2011

மனம் விட்டு இரசிப்போம்...!

நமக்குள் இருக்கும்....
ரசிப்பு தன்மையை நம்மில்...
எத்தனைபேர்... எத்தனை முறை..
இதுவரை கவனித்திருக்கிறோம்.....!
விரல் விட்டு எண்ணிவிடலாம்...!
...
வித..விதமான...
கேள்விகள் கேட்கும் மழலைகளை......
ரசிக்க தெரியாமல்...
அதிகப்பிரசங்கி என பட்டம் சூடி...
கேவலப்படுத்தி இருப்போம்...!

வானத்தில்..
வித...விதமான கோலம் போடும் மேகங்களை...
ரசிக்க தெரியாமல்....
மழைகாலங்களில் ..
மட்டும்...அண்ணாந்து பார்த்து......
நிறம் பார்த்து.......
மழை நிற்கும்....
ஜோசியம் சொல்வோம்....!

மனைவியின்...,
தாயின்...
சமையலை..
இரசித்து பாராட்டாமல்...
அவசரப்படுத்தி...
அள்ளி வாயில் திணிததுக்கொண்டே.....
வேலைக்கு கிளம்பி இருப்போம் ..உணர்வுகளை கொன்று.!


பூக்கும் மலர்களை
ரசித்ததை விட....
பறித்துதான் பழக்கம்....!


இனி..
ஒவ்வொரு...
நொடியையும்....
மனம் விட்டு இரசிப்போம்...!

ரசிக்கும் மனிதனாய்
புது பிறப்பெடுப்போம்....!

No comments:

Post a Comment