Tuesday, January 25, 2011

புது யுகம் படைத்த பெருமிதம் ....

எந்த இடத்தில்....
யார் கிடைத்தாலும் புலம்பும்....
மனோபாவம் உங்களிடம் இருக்கா...?

எதைப்பற்றி...என்ற வரைமுறை இல்லாமல்....
...யாரைப்பற்றி.. என்ற அறிமுக தேவையில்லாமல்....
ஏன் என்ற... கேள்விகளை எழுப்பாமல்....
எதற்காக என்ற.. பொறுப்பற்ற தன்மையுடன்....
நேரத்தை கொன்று...
எதிரில் அகப்பட்ட...
அத்தனை..
பேர்களுடைய...
உணர்வுகளை...உதாசினப்படுத்தி...
மொத்தத்தில்
உங்களின் சுயமாரியதையை..
சமாதியாக்கி...
எதையும்....
புலம்புபவர்களா நீங்கள்...?

இனி....

உங்கள் புலம்பல்களை மாற்றி...
எண்ணங்களில் நியாயத்தை பிரதிபலித்து....
வெளிப்படுத்தி பாருங்கள்...!

உங்கள் வருகைக்காக...
எல்லோரும் காத்திருக்க தொடங்கி விடுவார்கள்...!


பெற்றவர்கள்..அல்லது..பிள்ளைகள்... மீது உங்களுக்கு...
வருத்தம் இருந்தால்...
அதை அவர்களிடமே..விவாதியுங்கள்....!
அவரை மட்டும் விட்டு...
மற்ற எல்லோரிடமும்...
புலம்பாதீர்கள்....!

நண்பன் தவறு செய்தால்...
நேர்மையை கற்று கொடுத்து..
சரி செய்ய பாருங்கள்....
அதை விட்டு...
நொடிக்கொருமுறை குற்றம் காட்டி...
அவனிடமே..புலம்பாதீர்கள்...!


நேசிப்பவர்களிடம்...
சந்தேகம் இருந்தால்..
அன்பால் விசாரித்து...
அரவணைத்து பாருங்கள்....
ஆனால்...
ஒவ்வொரு செயலும் துரோகம்தான்......
என குத்தி காண்பித்து....
அவர்களிடமே புலம்பி....
அவர்களையே வெறுக்காதீர்கள்...!

உங்கள் புலம்பல்கள் ....
பூகம்பமாய் மாறி ...
உங்களையும் சேர்த்து ....
அழிப்பதற்குள்...

பூக்களின் மென்மையுடன்....
பூரிப்பாய்..
பேச்சில் ஆறுதல்களை...
வெளிப்படுத்தி பாருங்கள்....!

புது யுகம் படைத்த பெருமிதம் ....
உங்கள்...
வாழ்க்கை முழுவதும் தொடரும்...!

No comments:

Post a Comment