Sunday, January 30, 2011

பழி சொல்வதை.. அவமானமாய் கருதுவோம்..

பிறர் மேல் பழி சொல்வது ....
என்பது..
காலாகாலமாய்...
தொடரும் முரண்பாடு...!

உயர்வான நிலை ...
வரும்போது மட்டும்...
நம் உழைப்பையும்..
செயல்களையும் ..
உதாரணம் காட்டி...
பெருமை படுவதும்....!

தோற்கும் போதும்...
தவற விடும் போதும்....
மற்றவர்களை காரணம் காட்டுவதும்...

ஏன் ...
பலசமயம்
படைத்தவன் மேல் பழி போடுவதும்..
காலாகாலமாய்...
நம்மால் ....
கடைப்பிடிக்கபடும்...
கட்டாயங்கள்...!


நீங்கள்...
தவறு செய்ததால்தான் ....
பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்றால்..
தயங்காமல்...
அதை ஏற்று...
சீர்படுத்தி பாருங்கள்...!

சரியென்று...
முடிவில்...
உங்களை .....
மதித்து ஏற்றுக்கொள்வார்கள்...!

உங்கள் மனசாட்சியும்...
உங்களை...
மதித்து விடும்...!

பிறர் மீது ....
அந்த பழியை சுமத்தினால்....
பயத்தினாலும்..
வெறுப்பினாலும்..
உங்கள் வாழ்க்கையின்
பெரும்பகுதி..
பாழாகிப்போகும்...!

உங்கள் ..
தவறுதலான செய்கை..
பிறரின்..
செயல்களில் தடை உண்டாக்கியது ...
என உணர்ந்தால்..
உடனே..
ஒததுக்கொள்ளுங்கள்...
பிறகென்ன...
உங்களை சரி படுத்த..
இந்த உலகமே ...
உங்களுக்கு துணை தரும்...!

இதை விட்டு ...
மறுப்பையும்..
காரணம் இல்லாமல் ...
பழியை தேடி பதிலளிததால்..

குற்றவாளியக்கப்பட்டு...
தவிற்கப்படுவீர்கள்...!

தவறு செய்தது ...
நீங்கள் என்றால்..
உங்கள் மேல் .....
மற்றவர்கள்
சொல்லும் பழியை....
தண்டனை என பார்க்காமல்..
மாற்றிக்கொள்ள...
மற்றுமொரு ....
வழியேன முடிவெடுங்கள்...
மகத்தான வெற்றி .....
உங்கள் வசம்...!

அதன் பிறகு...

நீங்கள் ...
தெரிந்தோ...
தெரியாமலோ ..
செய்யும் தவறுகள்..
திருத்தபடும்...

ஆறுதலான...
ஆலோசனையும் கிடைக்கும்...!

இனி-

பிறர் மீது ...
பழி சொல்வதை..
அவமானமாய் கருதுவோம்..

நம் மீது ...
பிறர் பழி சுமத்தினால்....
திருந்த கிடைத்த ...
வாய்ப்பாய் ஏற்று..
வாழ்வின் ...
வெகுமானமாய்
மாற்றி கொள்வோம்..!

No comments:

Post a Comment