Wednesday, January 19, 2011

அளவுக்கு அதிகம் கிடைத்தால்...!?!?

தேவைக்கு அதிகம் எது...?
முரண்பாடான பல பதில்கள் கிடைக்கும்.....ஆனால் விடை கிடைக்காது....!
நேரம் அளவுக்கு அதிகம் கிடைத்தால்...சோம்பல் பிறக்கும்...!
பணம் அளவுக்கு அதிகம் கிடைத்தால்....பயம் மட்டும் அல்ல பொய்யும் வெளிப்படும்...!
பாசம்அளவுக்கு அதிகம் கிடைத்தால்...எதிர்காலம்,நிகழ்காலம் எல்லாம்....பாழகிப்போகும்...!
உழைப்பை அளவுக்கு அதிகம் வெளிப்படுத்தினால்...உடலும் மனமும் காயப்பட்டு போகும்...!
அன்பை அளவுக்கு அதிகம் கொடுத்தால்....அடிமையாக்கும் சக்தி நம்மை அறியாமலே நம்மில் பிறந்துவிடும்...!
கோபத்தை அளவுக்கு அதிகம் வரவழைத்தால்.....முற்றும் துறந்த முனிவன் கூட..தீவிரவாதியாக மாறிப்போவான்...!
காமத்தை அளவுக்கு அதிகம் தூண்டினால்....கண்ணில் விழும் எல்லாமே தாசியாக மாறி தெரியும்...!
பொறுப்புகளை அளவுக்கு அதிகம் ஏற்று கொண்டால்...எல்லோரையும் அதிகாரம் செய்யும்...ஆணவம் பிறக்கும்...!
இப்போது தெரிந்திருக்கும்...புரிந்திருக்கும்....
உங்களுக்குள் எது அதிகம் என....
அதை...அடக்குங்கள்.....
உங்கள் உள்ளங்கைகளில் உலகம் மட்டும் அல்ல..
நீங்களே  அடங்கி போவீர்கள்...!

No comments:

Post a Comment