Thursday, January 20, 2011

மனம்....! என்ன...?எது....?எப்படி...?

மனம்....!
என்ன...?எது....?எப்படி...?
இப்படி நாம் ஆராய்ந்தாலும்....உண்மையான .... பதில்...கிடைக்காது...!
மனம் என்பது யார் என... உங்களையே கேட்டு பாருங்கள்...?
இதென்ன அபத்தமான...கேள்வி என்று கேட்டவரை ஏளனமாய் பார்ப்பீர்கள்...!
...மனம் என்பது நீங்கள்தான்...!!!
எப்படி ..?.எப்படி...?எப்படி...?என உண்மை தெரிந்த பயத்தில் நீங்கள் படும் பதட்டமும் தெரிகிறது...அதை மறைக்க முயல்வதும் தெரிகிறது....!
மனம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திய மாய வலை...!
ஆனால், சிக்கிதவிப்பது நாம்தான்...!

நம் ஏக்கம்..இயலாமை...பொறாமை....
பயம்...கோபம்...வெறுப்பு....துரோகம்...ஏளனம்...
இப்படி பல வடிவங்களின் மொத்த வெளிப்பாடே.....நாம் மனம்.....!
இந்த மனசு இதை நினைத்து துடிக்கிறதே.....இப்படி புலம்புபவர்களை.....

என் மனசு என்ன சொல்லுதோ அதுதான் சரி..... இப்படி அதிரடியாய் ஆட்கொள்பவர்களையும்....

மனசே விட்டு போச்சு..வெறுததுட்டேன்....இப்படி விரக்தியாய் பின் வாங்குபவர்களையும்...

தனி தனியாய் பேசி பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும்....!

மனசு என்ற முகமூடிக்கு பின்னால் அவர்கள்தான் மறைந்து வெளிப்படுகிறார்கள் என்று...!
மனம் என்பது...
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகால்....!

உங்களை கட்டுப்படுத்த கூடாது...!

ஏன்...பல சமயம்....உங்கள் சுயரூபத்தை..வெளிப்படுத்திவிடும்...!
மனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை....!

மனம் என் சொல்லுக்கு கட்டுப் பட மறுக்கிறது....!

என வேசம் கட்ட...காட்ட...வேண்டாம்...!
மனம் என்பதை
மறுத்து...
மறந்து...
மறைத்து...
இனி வாழ தொடங்குவோம்...
மனிதன் என பெருமை கொள்வோம்...!

No comments:

Post a Comment