Tuesday, January 18, 2011

உணர்வோம்...உயர்வோம்.....!

உணர்வுகள்...!மதிப்பது,ஏற்றுக்கொள்வது,தருவது...என எல்லாவற்றையும் விட....புரிந்து கொள்வதுதான் முக்கியம்...!வயதில் மூத்தவர்கள் சபையில்.....தலைவன்,முதலாளி,அறிஞன்,என யாராக நீங்கள் இருந்தாலும்...கால்மேல் கால் போட்டு அமர்ந்து...உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவது உங்கள் அறியாமை..... என நீங்கள் சமாதானம் சொன்னாலும்...சபையின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் சக்தி உங்களுக்கு இல்லை என சொல்லலாம்...!குதூகலமான சூழ்நிலைகளில்...தாமதமான குழந்தை பேறு,,,வேலையின்மை....திருமண பொருத்தம் அமையாமை...போன்ற கலாகாலமாக..தொடரும் பிரச்சனைகளை..அக்கறையுடன்..ஆறுதலாய்..விசாரிப்பது என்பது..உங்கள் பொதுநல போக்கு என நியாயப்படுத்தினாலும்..சம்பந்தப்பட்ட நபர்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.. என்பதைவிட கொச்சை படுத்திவிட்டீர்கள் என்பதே உண்மை...!சாலையில் சரசத்துடன் உரசி போகும் இளம் ஜோடி.....பஸ்ஸில்,இரயிலில்....நகர்ந்து உட்கார்ந்து இடம் தராதது....பொது இடங்களில் நீங்கள் மட்டும் சாப்பிடுவது....இப்படி வரிசை படுத்தி..உங்களை நீங்களே சமாதானம் செய்யாமல்....உதாசீனம் செய்த உணர்வுகளை..பட்டியல் இட்டு பாருங்கள்....!உங்கள் உணர்வே உங்களை மதிக்காது...!இனி...சரியாக உணர்வோம்...உயர்வோம்.....!

No comments:

Post a Comment