Thursday, January 27, 2011

கட்டாயம்....!

பிடிக்காத..
புரியாத...
தெரியாத..
முடியாத..
விளங்காத... 
ஏற்றுக்கொள்ள முடியாத...
இப்படி-
பல விஷயங்களில் அடங்கிபோகும்...
அனைத்தையும் செய்யவேண்டும் ....
என -
யார் நினைத்தாலும் ....
அது -
கட்டாயம் எனபதில் அடங்கிவிடும்...!

கட்டாயம் ..
என ...
சொல்லும் போதும்..
கேட்கும் போதும்...
நமக்குள் ஒரு வெறுப்பு...
வந்து போவதை ..
உணரமுடியும்...!


சில விஷயம் ...
கட்டாயம் ...
என்பது..நமக்கே தெரியாமல் ....
நடந்தால் ...
அது -
அடிப்படை ...
கடமை என்று கூட சொல்லலாம்...!

உயிர் வாழ மூச்சு...

நலமுடன் வாழ உணவு...!
இப்படி நிறைய......!

ஆனால்-
கட்டாயம்..
என்ற விஷயத்தில் தான்.....
நம் வாழ்க்கையின் ...
எல்லா விஷயங்களும் அடங்கும்...
என நினைத்து வாழ்ந்தால்..
நிம்மதி....
அமைதி..
அன்பு...
ஏன் -
எதையுமே ....
எதிர்பார்க்க முடியாது....!

அன்பை வேண்டி ....
கட்டாயப்படுத்தினால்...
கோபம்..
வெறுப்பு..
நிராகரிப்பு...
சிலசமயம்-
கொடூரம் கூட பிறக்கும்...!

உழைப்பை ....
கட்டாயப்படுத்தி வரவழைத்தால்....
நஷ்டம் நிச்சயம்....!

மன்னிப்பு வேண்டி...
கட்டாயப்படுத்தினால்...
மனிதாபிமானம் ..
மரத்து போகும்..!

உதவி நாடி ..
கட்டாயப்படுத்தினால் ...
யாசகமாய்(பிச்சையாய்) மாறும்...!

கடன் வேண்டி
கட்டாயப்படுத்தினால்.....
அடிமையாக்கப்படுவோம்...!

ஆதரவு வேண்டி
கட்டாயப்படுத்தினால்....
தனிமை படுத்தப்படுவோம்...!

இப்படி -
கட்டாயமே ...
வாழ்வின் ஆதாரம் ...
என-
வாழ்ந்தால்...
நரக வாழ்க்கை ....
நிச்சயம்...!

கட்டாயம் -
என்ற சொல்..
உங்கள் வாழ்க்கைக்கு ...
கட்டாயம் இல்லை ...
என -
முடிவெடுங்கள்...!

உங்கள் ...
சொல்...
செயல்...
வாழ்க்கை ...
என-
எல்லாமே ....
சுகமாக மாறும்...!

இது..
தான் உண்மையான
கட்டாயம்....!

காலத்தின்....
கட்டாயம்....!

No comments:

Post a Comment